Regional02

வல்லம் கிராமத்தில் 17 செ.மீ மழைப் பொழிவு :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில் ), விழுப்புரம் 63, கோலியனூர் 57, வளவனூர் 49,கெடார் 46, முண்டியம்பாக்கம் 60, நேமூர் 69, கஞ்சனூர் 81, சூரப்பட்டு 58, வானூர் 87, திண்டிவனம் 127, மரக்காணம் 71, செஞ்சி 100,செம்மேடு 89, வல்லம் 175,அனந்தபுரம் 91, அவலூர்பேட்டை 98, மணம்பூண்டி 41, முகையூர் 54, அரசூர்16.5, திருவெண்ணெய்நல்லூர் 37. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 1568.50 மி.மீ, சராசரி மழை அளவு 74.69 மி.மீ ஆகும். இம்மழையில் 2 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் ஒரு மாடு பலத்த காயமடைந்துள்ளது என்று ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஆய்வு

SCROLL FOR NEXT