Regional02

பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு :

செய்திப்பிரிவு

திண்டிவனம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் லூயிஸ் எடிசன் ராஜ் (50). இவரது மனைவி ஜூலி சுதா (44). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் ஜூலி சுதாவிடம் 6 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT