Regional01

தொழிலாளி கொலை :

செய்திப்பிரிவு

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியைச் சேர்ந்த ரமேஷ் (32). பெயின்டிங் தொழிலாளி. இவர், தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் மது அருந்தி யுள்ளார். அப்போது, நண்பர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நண்பர் முருகானந்தம் (21) என்பவர், ரமேஷை தாக்கியுள்ளார். இதில் ரமேஷ் உயிரிழந்தார். திசையன்விளை போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகானந்தத்தை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT