Regional02

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - ஆசிரியர்கள் 2 பேருக்கு சிறை : சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்தவர் சரவணன் (48). இவர் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு 7-ம் வகுப்பு படித்த மாணவியை 2015-ம் ஆண்டு டிச.14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பத்தூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த சிவகங்கை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பாபுலால், ஆசிரியர் சரவணனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

சிவகங்கை அருகே காஞ்சிரங் காலைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (36). இவர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 2-ம் வகுப்பு படித்த மாணவியை 2015-ம் ஆண்டு ஆக.11-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவகங்கை மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரங்கராஜை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சிவகங்கை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பாபுலால், ஆசிரியர் ரங்கராஜூக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

SCROLL FOR NEXT