Regional01

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (42). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியிலுள்ள செல்வகாளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த எடமலைப்பட்டிபுதூர் நாதர் நகரைச் சேர்ந்த அருண்குமார் மகன் விஜய் (18), இந்திரா நகரைச் சேர்ந்த மகேஸ்வரன் மகன் ரத்தினம்(18) ஆகியோர் பிரபாகரனிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜய், ரத்தினம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT