Regional01

கள்ளக்குறிச்சியில் : ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி ஏஎல்சி சர்ச் வளாக குடியிருப்பில் வசிப்பவர் விஜய் தேவகுமார் (45). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு தன் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் தூங்கினார். நேற்று காலை விஜய்தேவகுமார் எழுந்து பார்த்த போது வீட்டு பின் பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, 15 பட்டுப்புடவைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT