Regional01

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு :

செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்க பிரிவில் 2021–22-ம் கல்வி ஆண்டுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்கள், வட்டார மற்றும் குறு வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது.

நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்ட அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

அதில், 87 ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில் இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து பணியிட மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT