மத்திய அரசு சார்பில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
கரோனா 2-வது அலையின் போது, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சையின்போது ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய அரசு நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுத்தது.
சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டன. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்துக்கு 2 ஆயிரம் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு ஏற்கெனவே திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், ஆத்தூர் மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் நிறுவப்பட்டது. இதன் மூலம் 50 முதல் 60 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய முடியும். இந்த நிலையத்தை நேற்று காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதையொட்டி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியர் சரண்யா தேவி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ, ஜெய சங்கரன், மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோட்டில் செறிவூட்டும் இயந்திரம்
நிமிடத்திற்கு 1000 லிட்டர்
உற்பத்தி மையத்தை திறந்து வைத்து எம்பி பேசுகையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
இவ்விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூரில் பிரதமர் மோடி திறப்பு
இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.