Regional02

கருப்பாநதி அணையில் 10 மி.மீ. மழை :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டியபகுதிகளில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கருப்பாநதி அணையில் 10 மி.மீ., தென்காசியில் 9.80, ஆய்க்குடியில் 8, அடவிநயினார் அணையில் 3, குண்டாறு அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 62.90 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 57.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.82 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 125 அடியாகவும் இருந்தது.

நாகர்கோவில்

SCROLL FOR NEXT