கேரளாவுக்கு ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீத்தாபழம் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5143 சதுர கி.மீ. இதில் 2024 சதுர கி.மீ வனப் பரப்பு. இங்குள்ள வனப்பகுதிகள், சிறிய காடுகளில் சீத்தா மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனை தவிர மேலுமலை, சின்னாறு, கிருஷ்ணகிரி, பர்கூர், ஜெகதேவி, தொகரப்பள்ளி, அஞ்சூர், குருவிநாயனப்பள்ளி, மல்லபாடி, காளிக்கோயில், நாகமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சீத்தாபழம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ள மழையால், நிகழாண்டில் சீத்தாபழம் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து சீத்தாபழம் கொள்முதல் செய்யும் விவசாயிகள், இங்கிருந்து பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
பெண்களுக்கு கைகொடுக்கும்
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும், நிகழாண்டில் கேரளாவிற்கு ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் சீத்தாபழம் விளைச்சல் இருந்தும் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
10 டன் ஏற்றுமதி