Regional02

ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் எஸ்எப்சி நிதியை உடனடியாக வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பணிகளையும் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் செயல்படுத்த வேண்டும் ஆகியவை உட்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கூட்டமைப்புச் செயலாளர் செந்தில்குமார், கூட்டமைப்புத் தலைவர் சித்ராமருது, பொருளாளர் முகமது இக்பால், ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT