தமிழகத்தில் மூன்றாவது முறையாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் 100 மையங்கள் உட்பட மொத்தம் 435 மையங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி பணியாளர்கள் 435 பேர், 11 மேற்பார்வையாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி
சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களுக்கு பிரத்யேகமான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.
தூத்துக்குடி
மாநகர நல அலுவலர் வித்யா உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர். அனை த்து இடங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கன்னியாகுமரி
பின்னர் அவர் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 510 மையங்களில் நடக்கிறது. சுமார் 1 லட்சம் தடுப்பூசி இருப்பில் உள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் 200 டோஸ் என்ற அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.