சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் இன்று (26-ம் தேதி) நடத்தப்படும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 20 டோஸ் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இன்று கரோனாதடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில், தற்போது கரோனா தடுப்பூசி 1 லட்சத்து 11 ஆயிரத்து 20 டோஸ்கள் கையிருப்பு உள்ளது. இதனடிப்படையில், மாவட்டத்தில், ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், சேலம் மாநகராட்சி பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் ஆயிரத்து 392 மையங்களில் பொதுமக்களுக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் 2-ம் தவணை போடப்படுகிறது. தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளில், தேவைக்கேற்ப முதல், 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
1079 இடங்களில் தடுப்பூசி முகாம்
இதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் 600 இடங்கள்
தருமபுரியில் 379 இடங்கள்