திருநெல்வேலி மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளில் கல்வியில் சிறந்து விளங்குவோருக்கு பரிசுகள் வழங்கும் விழா, பாளையங்கோட்டை மாநகராட்சி மஹாலில் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுடன் மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன். படம்: மு.லெட்சுமி அருண். 
Regional03

மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான பரிசளிப்பு விழா பாளையங்கோட்டையிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நகராட்சி கூட்டமைப்பின் தலைவர் வ.பாலசந்தர் தலைமை வகித்தனர். நகராட்சி மற்றும் மாநகராட்சி கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இரா.சீத்தாராமன் வரவேற்றார். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணு சந்திரன் பரிசு வழங்கினார்.

SCROLL FOR NEXT