Regional01

ஓட்டுநர் கொலையில் வழக்கறிஞர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(41), ஆட்டோ ஓட்டுநர். இதே பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சதீஷ்குமார்(34). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் தாக்கப்பட்டார். கீழே விழுந்த அவர் காயமடைந்தார். தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தார். தென்காசி போலீஸார் விசாரணை நடத்தி சதீஷ்குமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT