Regional04

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி - கோவை, திருப்பூரில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை : கரோனா தடையால் கோபுரத்தை தரிசனம் செய்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்களின்றி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன.

நடப்பாண்டு கரோனா அச்சம் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோயில், உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், ராஜவீதியில் உள்ள வெங்கடரமண பெருமாள் கோயில், பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில், பீளமேட்டில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில், அன்னூர் அருகே மொண்டிபாளையத்தில் உள்ள பெருமாள் கோயில், தென்திருப்பதி பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று, கோபுரத்தை தரிசனம் செய்து சென்றனர்.

பொள்ளாச்சி

திருப்பூர்

உடுமலை

SCROLL FOR NEXT