தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளதால் அவை அழுகி வீணாகிறது. மேலும், கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.3 கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்கின்றனர்.
அதிக அளவில் தக்காளி சாகுபடி
விவசாயிகளிடமிருந்து தக்காளியை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
ஏற்ற இறக்கத்தில் விலை
குறிப்பாக கிருஷ்ணகிரி அடுத்த தின்னகழனி, மலைசந்து, பெல்லம்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பயிர் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தக்காளிப் பழங் களை அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். இதனால், அவை செடிகளில் அழுகி கீழே விழுந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கூலி கூட கிடைப்பதில்லை
தற்போது சந்தையில் தக்காளி கிலோ ரூ.7-க்கு விற்பனையாகிறது. மொத்த வியாபாரிகள் எங்களிடம் ரூ.3-க்கு கொள் முதல் செய்கின்றனர். இது எங்களுக்கு அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை. நீண்ட நாட்களாகவே தக்காளி விலை சரிந்தே உள்ளது.இதன் காரணமாகவே தற்போது செடிகளில் உள்ள தக்காளிப் பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளோம். இதனால், பழங்கள் அழுகி வீணாகிறது. ஒரு சிலர் தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
சிரமத்தை குறைக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.