Regional02

ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரைவங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, சிறு,குறு விவசாயி என்பதற்கான சான்று, கணினிவழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT