விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள். 
Regional02

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி - சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் குருசாமி தொடக்க உரையாற்றினார். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணியாற்றிய கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர்.

ஆண்டிபட்டி

திண்டுக்கல்

SCROLL FOR NEXT