Regional01

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி அண்ணன், தம்பி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் அருள்(28), அஜித்(18). இவர்கள் இருவரும் நேற்று திருவையாறு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஏலாக்குறிச்சி சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT