Regional03

ரூ.32 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் இந்தாண்டு ரூ.32 கோடியில் 3,850 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பிரதமமந்திரி நுண்ணீர் பாசனத் திட்டமாவட்ட இயக்க குழுக்கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் இந்தாண்டு ரூ.32 கோடியில் 3,850 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படவுள்ளது.

மேலும், நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை செயல்பாடு திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறு, மின்மோட்டார், பைப் லைன் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.6 கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தோட்டக்கலை துணை இயக்குநர் கே.கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், தோட்டக்கலை உதவி இயக்குநர் சேரலாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT