சத்குரு பிறந்தநாளையொட்டி, மரக்கன்றுகளை நடவு செய்த விவசாயிகள். 
Regional02

சத்குரு பிறந்தநாளையொட்டி 1.23 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள் :

செய்திப்பிரிவு

இதுதொடர்பாக, காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறும் போது,‘‘விவசாயிகளுக்கு பணப் பயன் தரக்கூடிய மண்ணுக்கேற்ற மரங்களான தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மலைவேம்பு, குமிழ் தேக்கு, கருமருது, மகாகனி போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டன. இதில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியாளர்கள் வழங்கினர்” என்றார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது,‘‘ மரங்கள் மூலம் மண்ணின் வளம் மேம்பட்டு ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும். இது தொடர்பாக பெருமைப்படுகிறோம். சத்குருவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர். மேலும், சத்குருவுக்கு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாக ஈஷா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT