தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
அங்குள்ள பூலித்தேவன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) , சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி உள்ளிட்டோரும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கோவில்பட்டி
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட தமிழர் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமை வகித்தார். தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் அ. வியனரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அப்துல்ஜப்பார், சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.