Regional02

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த சுள்ளங்குடி பகுதியில் திருமானூர் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே செங்கல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அதில், செங்கலுக்கு அடியில் வைத்து மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் உரிமையாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் கலியபெருமாளை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT