Regional02

பள்ளி ஆசிரியா் தற்கொலை :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், தேவேந்திர நகரைச் சோ்ந்தவர் சுரேஷ்குமார்(42). இளங்காக்கூரில் உள்ள அரசு தொடக் கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் சில மாதமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது வீடு அருகே உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதுரைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார்.

ராமநாதபுரம் டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT