Regional02

தள்ளுவண்டி கடைகளை தரம் உயர்த்த ஏற்பாடு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் சாலையோரங்களில் 24 தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த கடைகளை மாநகராட்சி மூலம் தரம் உயர்த்தி நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உணவகங்களை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்பட வைக்கவும், கடைக்காரர்களுக்கு, உணவு கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் மூலம் பயிற்சி வழங்கவும், 15 நாட்களுக்கு ஒரு முறை பாரம்பரிய உணவு விற்பனைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரமான, தரமான உணவை பொதுமக்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT