Regional02

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை : புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் நாகரத்தின பள்ளத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வக்குமார்(26). இவர், கடந்த ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சந்தியா நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட செல்வக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30,500 அபராதமும் விதித்து உத்தர விட்டார்.

SCROLL FOR NEXT