திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தாக தவறான தகவல் அளித்து பணிக்கு வரும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரித் துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை, செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை செயல்பட உள்ளது. இதையொட்டி, பள்ளிகளில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்திட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்துப் பேசும்போது, “80 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 100 சதவீதம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். ஒருவர் மூலம் 10 நாட்களில் ஆயிரம் பேருக்கு தொற்று பரவக்கூடும். ஆசிரியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை சுகாதாரத் துறையினர் உதவியுடன் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தவறான தகவல் தந்து விட்டு பணிக்கு வரும் ஆசிரியர்கள், பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தவறாமல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
வகுப்பறையிலேயே மாண வர்களை மதிய உணவு உட் கொள்ள செய்திட வேண்டும். மரத்தடியில் கூட்டமாக அனுமதிக்கக்கூடாது. மூன்றாவது அலையானது 18 வயதுக்கு குறைவானவர்களை தாக்கக்கூடும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கு வெளியே மற்றும் உள்ளே மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை எடுத்துரைக்க வேண்டும். பெற்றோரும் 100 சதவீதம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் சுற்றுப் பகுதி யில் ஏற்படும் பிரச்சினையை மக்கள் தெரிவிக்க, தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும்.
கூடுதல் பேருந்துகள்
எச்சில் துப்பக்கூடாது
6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கான வகுப்பு அட்டவணையை தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகத் தில் எச்சில் துப்பக்கூடாது. 3 கட்டுப்படுத்தப்பட்ட மண்டல பகுதியில் உள்ள பள்ளிகள் இயங்காது. அந்த பகுதியில் வசிக்கும் மாண வர்களையும் அனுமதிக்கக்கூடாது” என்றார்.
கஞ்சா, குட்கா விற்பனையா?