Regional04

கடையம் அருகே 25 பவுன் திருட்டு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள சிவநாடானூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (55). விவசாயியான இவர், தனது குடும்பத்தினருடன் கலிதீர்த்தான்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். திருவிழா பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT