Regional02

ஆக்கிரமிப்பு அகற்றம் :

செய்திப்பிரிவு

திருப்பூர் வடக்கு வட்டம் வேலம்பாளையம் செட்டிபாளையம் பகுதியிலுள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை, அங்குள்ள தனிநபர் ஆக்கிரமித்து கட்டிட பணியில் ஈடுபட்டிருப்பதாக, ஊர் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, நில வருவாய் ஆய்வாளர், செட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர் உள்ளிட்ட மாவட்ட வருவாய் துறையினர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்றினர்.

அதிகாரிகள் ஆய்வுக்கு வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பட விளக்கம்

திருப்பூர் வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்ட வருவாய் துறையினர்.

SCROLL FOR NEXT