Regional02

பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை :

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் பர்னிச்சர் கடை உரிமையாளரை கொலை செய்த 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் எருமைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(48). இவர், மாநகராட்சி அலுவலகம் அருகே சர்ச் காம்ப்ளக்சில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். கடையில் நேற்று இரவு அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஏழு பேர் கொண்ட மர்மக் கும்பல் மணிகண்டனை அரிவாளால் வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார்.

ஏ.டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் கொலை நடந்த இடத் தில் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT