கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா விழிப்பு ணர்வு வார விழா நேற்று தொடங் கியது.
கடலூர் பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு வாரத் தினை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன் முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தொடக்கி வைத்தார். பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அதிநவீன வீடியோ வாக னத்தின் மூலம் கரோனா
விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிப்பரப்பு தொடங்கப்பட்டது. வண்டிப்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண் டபத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
எஸ்பி சக்திகணேசன், கூடுதல்ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித் சிங்,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி