குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காவல் துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
Regional02

செங்கை மாவட்ட காவல் நிலையங்களில் - குழந்தை காவலர் திட்டம் அறிமுகம் :

செய்திப்பிரிவு

செங்கை மாவட்ட காவல் நிலையங்களில் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கண்காணிக்க குழந்தை காவலர் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, ஆத்தூர் சிறுவர்மலர் குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் விநாயகம், குழந்தை நல குழுமம் தலைவர் ராமச்சந்திரன், சைல்டு லைன் இயக்குநர் தேவ அன்பு, சொசைட்டி ஃபார் எஜுகேஷனல் இயக்குநர் தேசிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், இளஞ்சிறார் நிதி குழுமத்தின் உறுப்பினர் ஜூலி, செங்கல்பட்டு சிறப்பு குழந்தைகள் இல்லத்தின் உதவி கண்காணிப்பாளர் பாண்டியன், தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த பரஞ்ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விரைவில் நடவடிக்கை

SCROLL FOR NEXT