Regional02

கஞ்சா செடி வளர்த்தவர் கைது :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆற்றுப்படுகையில் பொன்னுசாமி என்பவர் முருகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரவள்ளி பயிர் செய்து வருகிறார். இந்த தோட்டத்தில் தியாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு (55)என்பவர் வேலை செய்து வருகி றார். இவர் மரவள்ளி பயிருக்கு இடையே ஊடுபயிராக 7 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தார். நேற்று காலை போலீஸார் 7 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அய்யாகண்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT