திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் மீன் உணவகம் மற்றும் விற்பனை அங்காடியை மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார். ராமையன்பட்டி, மானூர், கோடகநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.