Regional02

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 180 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 59,086பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 92 பேர் குணமடைந்தனர். தற்போது 818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிிரிழப்பு ஏதும் இல்லை. 792 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 39பேர் குணமடைந்தனர். தற்போது 601பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 334 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT