Regional02

விபத்தில் வேளாண் அலுவலர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் வேளாண் அதிகாரி உயிரிழந்தார்.

சேலம் மரவனேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தினகரன் (50). இவர் வேலூர் மாவட்டம் மாதனூரில் வேளாண்மைத் துறையில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கிருஷ்ணகிரி-தருமபுரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார்.

காவேரிப்பட்டணம் அடுத்த புளுக்காண்டியூர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையின் மையத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT