திண்டுக்கல் மாவட்டம், தரு மத்துப்பட்டியில் சாராயம் விற்பதாக பழநி போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெய ராஜ் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். முத்துசாமி மகன் அன்னராஜா(38) என்பவர் மளிகைக் கடையில் 200 மி.லி., குளிர்பான பாட்டிலில் சாராயம் விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.