Regional01

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் செந் துறையை அடுத்த சிறுகடம்பூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர் களுக்கு வசந்த்(7), கபிலன்(5) என 2 மகன்கள்.

இந்நிலையில், வசந்த், கபிலன் ஆகிய இருவரும் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று மாலை குளித்தபோது நீரில் மூழ்கினர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்ட போது, வசந்த் உயிரிழந்தார். கபிலன் ஆபத்தான நிலையில் குமிழியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT