தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகத்தின் ‘SMILE’ என்ற கடன் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பிற்படுத் தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் சார்பில் ‘SMILE’ என்ற கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். ஆண் டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.
கரோனா தொற்றால் குடும்பத் தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் உயிரிழப்புக்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித் துள்ளார்.