Regional01

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி - திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முற்றுகை :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர். குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்கள், விரைவில் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி யளித்தனர். இதையடுத்து அம் பேத்கர் நகர் மக்கள் போராட் டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT