மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 205 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் 55 பேர், கரூரில் 32 பேர், மயிலாடுதுறையில் 44 பேர், நாகப்பட்டினத்தில் 45 பேர், பெரம்பலூரில் 22 பேர், புதுக்கோட்டையில் 66 பேர், தஞ்சாவூரில் 197 பேர், திருவாரூரில் 71 பேர், திருச்சியில் 205 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், அரியலூரில் 5, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் தலா 2, பெரம்பலூரில் 1, தஞ்சாவூரில் 3, திருச்சியில் 8 பேர் என மொத்தம் 21 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 809 பரிசோதனை முடிவுகளில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.