Regional02

சிறுமியை கடத்திய சிறுவன் கைது :

செய்திப்பிரிவு

ஊத்தங்கரை அருகே சிறுமியைக் கடத்திய சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். இவர் பிளஸ் 2 முடித்துள்ளார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி முதல் சிறுமி மாயமானார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி படித்த அதே பள்ளியில் படித்த 17 வயது சிறுவன், சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீஸார் சிறுமியை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT