Regional01

புதிதாக 229 பேருக்கு : கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,275 ஆக அதிகரித்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,727-ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT