Regional02

தஞ்சாவூரில் 305 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்தில் அதிகபட்ச மாக தஞ்சாவூரில் 305 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 63, கரூரில் 80, நாகை, மயிலாடுதுறையில் 108, பெரம்பலூரில் 37, புதுக் கோட்டையில் 77, தஞ்சாவூரில் 305, திருவாரூரில் 80, திருச்சியில் 235 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் 1, கரூர், நாகை, பெரம்பலூர், தஞ்சாவூர் தலா 2, புதுக்கோட்டை 5, திருச்சி 8 என 22 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 725 பரிசோதனை முடிவுகளில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 14,365 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 415 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT