Regional01

பெண் மீது ஆசிட் ஊற்றிவிடுவதாக மிரட்டியவர் கைது :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் குரும் பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா மகன் கஜேந் திரன்(19). இவர், 18 வயது பெண் ஒருவரிடம் தன்னை காதலிக் கவில்லையெனில் ஆசிட் ஊற்றி கொன்று விடுவதாக மிரட் டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார், பெரம்பலூர் எஸ்.பிக்கு செல்போன் மூலம் புகார் அளித்தார். இதையடுத்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார், கஜேந்திரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT