Regional02

தஞ்சாவூரில் 1,020 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 1,020 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 264, கரூரில் 326, நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் 613, பெரம்பலூரில் 228, புதுக்கோட்டையில் 311, தஞ்சாவூரில் 1,020, திருவாரூரில் 620, திருச்சியில் 823 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூர் 8, கரூர் 10, நாகப்பட்டினம் 7, பெரம்பலூர் 7, புதுக்கோட்டை 7, தஞ்சாவூர் 10, திருவாரூர் 8, திருச்சி 11 என 68 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT