திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 133.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,626.18 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 859.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் 89.75 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து நேற்று காலையில் 90.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 529.75 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 28 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.49 அடியாகவும் இருந்தது.
குண்டாறு அணை
அனைத்து அணைகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குண்டாறு அணைப் பகுதியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தடையை மீறிச் சென்று குளிப்பது வாடிக்கையாக உள்ளது. மேலும், அணையில் இருந்து தண்ணீர் மறுகால் செல்லும் பகுதி வழியாக நடந்து சென்று அதனை வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் இளைஞர்கள் பகிர்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
போலீஸார் எச்சரிக்கை