Regional02

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1500 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 3000 கனஅடியாக உயர்ந்தது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 240 கனஅடியாக இருந்தது. அணையில் 41.67 அடிக்கு தண்ணீர் உள்ளது.

அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாயிலும் விநாடிக்கு 240 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT