தக்காளி மூட்டைக்குள் மதுபாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவருடன் திருக்கோவிலூர் போலீஸார். 
Regional02

திருக்கோவிலூரில் மது கடத்திய 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருக்கோவிலூர் பயிற்சி உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தலைமை காவலர் கணேஷ், இதர போலீஸார் நேற்று அதிகாலை ரோந்தின் போது குரங்கன் காப்புக்காடு வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் தக்காளி மூட்டைகளை இருப்பதைக் கண்டு எங்கிருந்து வருகிறது என விசாரித்தனர்.அப்போது, பெங்களூரில் இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து போலீஸார் தக்காளி மூட்டைகளை சோதனையிட்ட போது, அதில் 432 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வில்லிவளத்தைச் சேர்ந்த வாகனத்தின் ஓட்டுநர் சத்யராஜ்(28),வாகனத்தின் உரிமையாளர் ரமேஷ்(32) ஆகியஇருவரையும் போலீஸார் கைது செய்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT